இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 2 எம்பி பதவிக்கு அக். 4ல் தேர்தல்

9/9/2025 5:22:18 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

புதுடெல்லி: மாநிலங்களவையில் தமிழகத்திற்கான காலியாக உள்ள 2 எம்பி பதவிக்கான தேர்தல் வரும் அக். 4ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக எம்பிக்களாக இருந்த முகமது ஜான் மறைவு, வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகிய இருவர் ராஜினாமாவால், மாநிலங்களவையில் தமிழகத்திற்கான 3 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 3 இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டுமென திமுக கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம், ஒரு இடத்திற்கான தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், திமுகவை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.

சுயேட்சையாக போட்டியிட மூன்று வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த மூன்று மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. எம்.எம்.அப்துல்லாவின் மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைந்ததால் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவர், 2025ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி வரை மாநிலங்களவை உறுப்பினராக செயல்படுவார். இந்நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, வேட்புமனு தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்கும்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப். 22ம் தேதியும், வேட்பு மனுக்கள் பரிசீலனை 23ம் தேதியும், வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல் 27ம் தேதியும், வாக்குப்பதிவு வரும் அக். 4ம் தேதியும் (வாக்குப்பதிவு நேரம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை), அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் வரும் அக். 6ம் தேதியுடன் நிறைவுபெறுவதாக தேர்தல் ஆணையம் ெதரிவித்துள்ளது. இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2  இடங்களும் திமுக கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் சில
  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



  • முன்பே செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்...ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி எப்படி சாத்தியம்?: பாஜகவை வறுத்தெடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்



  • சிறை கைதிகளை காணொலி மூலம் ஆஜர்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]