இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்: குன்னூரில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

8/30/2021 5:13:07 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

குன்னூர்: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா ஒருபோதும் தயங்காது என குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில், வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய எல்லைகளில் சவால்கள் இருந்தாலும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த ஒரு சமரசமும் இருக்காது என நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2 போர்களை இழந்த பிறகு, நமது அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மறைமுக போரை நாட தொடங்கியது. பயங்கரவாதம் என்பது பாகிஸ்தானின் ஒரு அங்கமாகி விட்டது.

பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், நிதி மற்றும் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்தியாவை குறிவைக்க துவங்கியது. தற்போது, இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு எங்கள் பலம் தான் காரணம். கடந்த 2016ல் எல்லை தாண்டிய தாக்குதல்கள் இந்தியாவின் பிற்போக்கு மனநிலையை ஒரு செயலூக்க மனநிலையாக மாற்றியது. இது 2019ல் பால்கோட் வான்வழி தாக்குதலால் மேலும் வலுவடைந்தது. இந்தியா தனது சொந்த நிலத்தில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் தங்கள் நிலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தவும் தயங்காது என்ற நம்பிக்கை படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இதேபோல் கடந்தாண்டு வடக்கு துறையிலும், எல்லையில் இருந்த நிலையை மாற்ற ஒருதலைபட்ச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கேயும் சுறுசுறுப்புடன் எதிரியை எதிர்கொண்டோம்.

இந்தியா-சீனா எல்லை மோதலின்போது சீன படைகள் முன்னேற முயன்றபோது, ​​இரவு 11 மணியளவில் ராணுவ தளபதியிடம் பேசினேன். நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அந்த சூழ்நிலையிலும், இந்திய படைகள் விவேகமாக நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது. இதன்மூலம், எங்கள் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எந்த எதிரியையும் எதிர்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதை பாதுகாப்பு படையினர் மீண்டும் நிரூபித்தனர். ஆப்கானிஸ்தானில் மாறிவரும் சூழல் இந்தியாவுக்கு ஒரு சவாலாக உள்ளது. இந்த சூழ்நிலை, நம் நாட்டின் யுக்தியை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த போர் குழுக்களை உருவாக்குவதை பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் சில
  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



  • முன்பே செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்...ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி எப்படி சாத்தியம்?: பாஜகவை வறுத்தெடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்



  • சிறை கைதிகளை காணொலி மூலம் ஆஜர்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]