இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

எடியூரப்பா ராஜினாமா எதிரொலி; புதிய முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிப்பு: மேலிட பார்வையாளர்கள் இன்று மாலை பெங்களூரு வருகை

7/27/2021 5:06:25 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வர் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்க பாஜ மேலிட பார்வையாளர்கள் இன்று மாலை பெங்களூரு வருகிறார்கள். மாநில முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற நாள் முதல், சில பாஜ மூத்த எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வந்தனர். சொந்த கட்சி எம்எல்ஏகளை புறக்கணித்து பிற கட்சியில் இருந்து வந்த 50 சதவீத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்துள்ளதால், தங்கள் எதிர்ப்பை காட்டினர். 

சில மூத்த எம்எல்ஏகள் மவுனமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய விஜயபுரா நகரம் தொகுதி எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல், ஆர்.யத்னால் வெளிப்படையாகவே எடியூரப்பா மீது கடுமையான விமர்சனங்களை கூறினார். அவருக்கு ஆதரவாக சில மூத்த எம்எல்ஏகள் இருந்தனர். மாநில பாஜவில் ஆட்சி தலைமை மாற்றம் செய்ய வேண்டும் என்று சிலர் கட்சி தலைமையிடம் லாபி நடத்தினர். அதற்கு பணிந்த பாஜ மேலிடம், வயதை காரணம் காட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் படி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தது. 

கட்சி தலைமையின் உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து தனது முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை அங்கிகரித்துள்ள மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், புதிய அரசு அமையும் வரை பொறுப்பு முதல்வராக இருக்கும்படி  எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டார். மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளதால், புதிய அரசு அமைய வசதியாக பாஜ எம்எல்ஏகள் கூட்டம் நடத்த வேண்டும். இதில் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்ய வேண்டும். அவர் முறைப்படி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கடிதம் கொடுக்க வேண்டும். இப்படி பல வழிமுறைகள் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. 

புதிய முதல்வர் தேர்வு செய்வது தொடர்பாக இன்று காலை டெல்லியில் பாஜ உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. அதில் யாரை முதல்வராக நியமித்தால் ஆட்சி சுமூகமாக இயங்குவதுடன் கட்சி வளர்ச்சிக்கும் துணையாக இருக்கும் என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள். முதல்வர் பதவி போட்டியில் சபாநாயகர் விஷ்வேஷ்வர ஹெக்டே காகேரி, பி.எல்.சந்தோஷ், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநில முன்னாள் அமைச்சர்கள் முருகேஷ்நிராணி, சி.டி.ரவி, பாஜ எம்எல்ஏ அரவிந்த பெல்லத் உள்பட பலரின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இதில் முருகேஷ் நிராணி மற்றும் அரவிந்த பெல்லத் ஆகியோரை முதல்வராக்க பெரும்பான்மையான பாஜ எம்எல்ஏகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. 

இது தொடர்பாகவும் உயர்நிலை குழுவில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மற்றவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆட்கள் மூலமும், ஆர்எஸ்எஸ் மூலமாகவும் முதல்வர் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்க பாஜ மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தலைமையில் மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், பியூஷ்கோயல், பூபேந்திரயாதவ் ஆகியோர் இன்று மாலை பெங்களூரு வருகின்றர். அவர்களிடம் உயர்நிலை குழுவில் எடுத்துள்ள முடிவுகளை மேலிட தலைவர்கள் தெரிவித்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மூத்த தலைவர்களிடையே பலத்த போட்டி நிலவுவதால், இதுவரை முதல்வர் யார் என்பதை முடிவு செய்யமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையில் பெங்களூருவில் இன்று காலை பொறுப்பு முதல்வர் எடியூரப்பாவை முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிராணி சந்தித்து பேசினார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள எடியூரப்பா இன்று காலை வழக்கம் போல், எழுந்து வாக்கிங் சென்றார். பின் சில நிமிடங்கள் யோகாசனம் செய்தபின், வீட்டின் வளாகத்தில் உள்ள மாட்டு தொழுவத்திற்கு சென்று, அவர் அன்பாக வளர்த்து வரும் மாடுகளை தடவி கொடுத்தார். அப்போது எடியூரப்பாவை சந்திக்க வந்த சிலரிடம் பேசிய பின், வீட்டிற்குள் சென்று விட்டார். அதேநேரத்தில், முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாலும், இன்னும் யாரையும் முடிவு செய்யாததாலும், கர்நாடகா அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

மேலும் சில
  • புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]