இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பூந்தமல்லி நீதிமன்றத்தில் பரபரப்பு: அரசு வக்கீல் அறையில் பதுங்கிய வாலிபரிடம் போலீஸ் விசாரணை: கொலை செய்ய வந்தாரா?

11/21/2014 3:44:30 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

பூந்தமல்லி: பூந்தமல்லி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அறையில் பதுங்கியிருந்த வாலிபரை போலீசார் பிடித்தனர். வக்கீலை கொலை செய்யவந்தாரா என்று  விசாரிக்கின்றனர்.பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் 2வது மாடியில் அரசு வழக்கறிஞர் அந்தமான் முருகன் அறை உள்ளது. நேற்று மாலை பணி  முடிந்ததும் தனது அறையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை பணிக்கு வந்த முருகன், தனது அறை கதவை திறந்தார். ஆனால் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு  இருந்தது. பலதடவை தட்டியும் கதவை திறக்கவில்லை. ஆனால் உள்ளே ஒரு ஆள் நடமாட்டம் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், நீதிமன்ற  ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து கதவை தட்டியும் திறக்கவில்லை.

அறை முன் ஆட்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.  கதவை திறந்து உள்ளே சென்றபோது வாலிபர் பதுங்கிருந்தார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது முரணாக பேசினார். இதனால் அவரை  காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர் பெயர் பாலாஜி (30) என்று தெரிந்து உள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். அவர்  உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர்தானா, நடிக்கிறாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கறிஞரை கொலை செய்யும்  நோக்குடன் பதுங்கியிருந்தாரா என்று விசாரிக்கின்றனர்.நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அறையில் பதுங்கியிருந்த வாலிபர் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • திருவல்லிக்கேணியில் கள்ளநோட்டு கொடுத்து பைக் வாங்கிய சகோதரர்கள் பிடிபட்டனர்



  • கம்பெனி கதவை உடைத்து 5 மிஷின்கள் கொள்ளை



  • மயக்க குளிர்பானம் தந்து சிறுமி பலாத்காரம்: தொழிலாளி கைது



  • சேலம் அருகே பயங்கரம்: காதலியை அடித்துக் கொன்று காதலன் தூக்கு போட்டு சாவு



  • ரூ. 1 கோடி செம்மரம் காருடன் பறிமுதல்



  • வன்னியர் சங்க தலைவர் கொலை : அதிமுக கவுன்சிலர் கைது



  • மயங்கி விழுந்த குழந்தை திடீர் பலி : உணவில் விஷமா? தந்தையிடம் விசாரணை



  • திருவள்ளூர் அருகே இளம்பெண் தற்கொலை : கணவன் மீது புகார்



  • நிலத்தை அபகரிக்காமல் இருக்க ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்: அதிமுக பிரமுகர் மீது புகார்



  • 110 பவுன் நகைகள் பறிமுதல் : சென்னையை கலக்கிய திருடன் கைது



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription