செம்பரம்பாக்கம் ஊராட்சியில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு
11/20/2014 2:00:24 PM
திருவள்ளூர்: பூந்தமல்லி தாலுகா செம்பரம்பாக்கம் கிராமத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக இடுகாடு மற்றும் சுடுகாட்டிற்கு, இறந்தவர்களின் சடலங் களை கொண்டு சென்று புதைப்பதற்கும், எரிப்பதற்கும் சர்வே எண்கள், 236, 146, 239, 271 ல் உள்ள மயான பாதையை பயன்படுத்தி வந்தனர். தற்போது இப்பாதையின் இருபுறமும் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் பாதை குறுகியதோடு, பழுதடைந்தும் உள்ளது. இது குறித்து சப்-கலெக் டர் ராகுல்நாத், மணிமாறன் எம்எல்ஏ, தாசில்தார் பவானி ஆகியோரிடம் ஊராட்சி தலைவர் முனியன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மயான பாதையை பார்வையிட்டனர். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிதாக சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர். அப்போது மாவட்ட கவுன்சிலர் சாந்தி ஜனார்த்தனம், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் பூங்கான், ஜெயபாரதி சிவகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.