வேடசந்தூர் அருகே இளம்பெண் பலாத்காரம்? தப்பிய 3 பேருக்கு வலை
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்து£ர் அருகேயுள்ள ஒட்டநாகம்பட்டியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர் வேடசந்து£ர் அரசு மருத்துவமனைக்கு தலையில் ரத்தக் காயத்துடன் ஆட்டோவில் வந்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி வந்த 3 மர்ம நபர்கள் மருத்துவமனையில்விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து இளம் பெண்ணிடம் விசாரித்து அவர்களது உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.தற்போது அந்த இளம்பெண் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இளம்பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்க முடியவில்லை. இளம் பெண்ணை 3 பேர் கும்பல் கடத்தி பலாத்காரம் செய்ததா என்று மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வேடசந்து£ர் அரசு மருத்துவமனையில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அந்த மர்ம நபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM