அதிகாரிகள் கண்களில் மண்ணை தூவி இறைச்சி கடைக்கு செல்லும் விலையில்லா ஆடுகள்
திருவள்ளூர்:தமிழக அரசு ஏழைகளுக்கு விலையில்லா கரவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1281 பயனாளிக்கு 5124 ஆடுகள் வழங்கப்பட்டன. இந்த ஆடுகளை யாரும் விற்பனை செய்ய கூடாது, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை கால்நடை துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள், அப்போது ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது.
தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் மேச்சல் நிலம் வறண்டு காணப்படுகிறது. இதனால் ஆடுகளுக்கு இறையாக செடி, கொடிகள் கிடைப்பதில்லை. இதனால் ஆடுகளை இறைச்சி கடைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் இலவச ஆடுகள் இறைச்சி கடைகளில் கறியாக மாறுகிறது. இதனால் அரசு திட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்கிறது.
கால்நடை துறை அதிகாரிகளின் கண்களை மண்ணைதூவிவிட்டு விலையில்லா ஆடுகளை இறைச்சிக்கு விற்பனை செய்வதை தடுக்கவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/4/2025 12:24:38 PM
-Updated 1/4/2025 12:06:22 PM
-Updated 1/4/2025 12:04:37 PM
-Updated 1/4/2025 12:04:27 PM
-Updated 1/4/2025 12:04:19 PM
-Updated 1/4/2025 12:04:11 PM
-Updated 1/4/2025 12:03:58 PM
-Updated 1/4/2025 12:03:49 PM
-Updated 1/4/2025 12:03:41 PM
-Updated 1/3/2025 2:18:56 PM
-Updated 1/3/2025 2:18:45 PM
-Updated 1/3/2025 2:18:36 PM
-Updated 1/3/2025 2:18:28 PM
-Updated 1/3/2025 2:18:19 PM
-Updated 1/3/2025 2:18:09 PM