ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல்
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவை விஸ்வ இந்து பரிஷத் ஆதரிப்பதாக கட்சியின் மாநில ஆலோசகர் வேதாந்தம் கூறினார். கோவில்பட்டி பாரதிநகரில் பூக்கட்டுவோர் பேரவை கிளை தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத் மாநில ஆலோசகர் வேதாந்தம் நிருபர்களிடம் கூறியதாவது: கிராம பூசாரிகளுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். கிராம பூசாரிகள் மற்றும் பூக்கட்டும் தொழில் செய்வோர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். கோயில்களை வியாபார ஸ்தலமாக ஆக்காமல் ஆன்மிக ஸ்தலமாக வைத்திருக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதத்தின் பெயரில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்படுவதை விஸ்வ இந்துபரிஷத் வன்மையாக கண்டிக்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் உரிய மதிப்பு அளிக்கவேண்டும். ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு விஸ்வஇந்து பரிஷத் ஆதரவு அளிக்கும் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/9/2025 2:38:02 PM
-Updated 11/9/2025 2:36:45 PM
-Updated 11/9/2025 2:36:30 PM
-Updated 11/9/2025 2:00:16 PM
-Updated 11/8/2025 2:46:11 PM
-Updated 11/8/2025 2:45:56 PM
-Updated 11/8/2025 2:45:44 PM
-Updated 11/8/2025 2:45:12 PM
-Updated 11/7/2025 3:12:05 PM
-Updated 11/7/2025 3:11:33 PM
-Updated 11/7/2025 3:11:24 PM
-Updated 11/7/2025 3:11:15 PM
-Updated 11/7/2025 3:11:04 PM
-Updated 11/7/2025 2:48:55 PM
-Updated 11/6/2025 2:56:59 PM