அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிப்பு
ஆவடி:அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகம், சிடிஹெச் சாலையில் அமைந்துள்ளது. வீடு கட்ட அனுமதி, வாக்காளர் அடை யாள அட்டை பெறுதல், வீட்டு வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு மண்டல அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை, இருக்கை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் கால்கடுக்க நின்று மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். அலுவலகத்தின் சுவர் ஓரமாக சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் அடிக்கிறது. அசுத்தம் காரணமாக நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.எனவே, அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM
-Updated 9/23/2013 2:35:00 PM
-Updated 9/23/2013 2:34:30 PM
-Updated 9/23/2013 2:34:18 PM
-Updated 9/23/2013 2:33:57 PM
-Updated 9/23/2013 2:33:45 PM
-Updated 9/23/2013 2:33:36 PM
-Updated 9/23/2013 2:12:33 PM
-Updated 9/23/2013 2:12:24 PM
-Updated 9/23/2013 1:53:55 PM
-Updated 9/21/2013 12:28:14 PM