நந்தம்பாக்கத்தில் 2 ஆண்டாக திறக்கப்படாத மேல்நிலை நீர் தொட்டி
ஆலந்தூர்: நந்தம்பாக்கம் பர்மா காலனியில் பிரசித்தி பெற்ற முனீஸ்வரர் கோயில் அருகே ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. நந்தம்பாக்கம் பேரூராட்சியாக இருந்தபோது கவுன்சிலராக இருந்த திமுகவை சேர்ந்த கிரிகுஜாலம்மாள், இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன்பேரில் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி தற்போது மாநகராட்சியோடு இணைக்கப்பட்டதால் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் பொது மக்கள் அவதிப்படு கின்றனர். ஆனால் இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/7/2025 4:57:16 PM
-Updated 2/7/2025 4:57:03 PM
-Updated 2/7/2025 4:56:50 PM
-Updated 2/7/2025 4:02:18 PM
-Updated 2/7/2025 4:02:05 PM
-Updated 2/7/2025 4:01:55 PM
-Updated 2/7/2025 4:01:45 PM
-Updated 2/7/2025 4:01:27 PM
-Updated 2/7/2025 3:18:43 PM
-Updated 2/7/2025 3:18:35 PM
-Updated 2/7/2025 3:18:24 PM
-Updated 2/7/2025 2:39:53 PM
-Updated 2/7/2025 2:39:44 PM
-Updated 2/7/2025 2:39:34 PM
-Updated 2/7/2025 2:39:21 PM