கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகே செங்கல்பட்டு, தாம்பரம் சாலையோரம் கடந்த 24ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சடலத்தை மீட்டு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்தவர் கொதபாக்ஸ் (39), கட்டிட மேஸ்திரி. கூடுவாஞ்சேரியில் நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் தங்கியிருந்த இடத்தில் இருந்து 24ம் தேதி முதல் காணாமல் போனதாக உடன் வேலை செய்தவர்கள் கூடுவாஞ்சேரி போலீசில் நேற்று புகார் கொடுத்தனர். விசாரணையில் வாகனம் மோதி இறந்தவர் கொதபாக்ஸ் என்பது தெரியவந்தது. புகார் கொடுக்க வந்தவர்களும் அவரை அடை யாளம் காட்டினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/28/2012 4:47:41 PM
-Updated 11/28/2012 4:47:30 PM
-Updated 11/28/2012 4:47:13 PM
-Updated 11/28/2012 4:47:03 PM
-Updated 11/28/2012 4:46:46 PM
-Updated 11/28/2012 4:46:36 PM
-Updated 11/28/2012 4:46:25 PM
-Updated 11/28/2012 1:01:07 PM
-Updated 11/28/2012 1:00:57 PM
-Updated 11/28/2012 1:00:47 PM
-Updated 11/28/2012 12:51:24 PM
-Updated 11/28/2012 12:51:14 PM
-Updated 11/28/2012 12:51:04 PM
-Updated 11/27/2012 3:13:53 PM
-Updated 11/27/2012 3:13:30 PM