கொட்டிவாக்கத்தில் மாமியாருடன் தகராறு : கர்ப்பிணி தற்கொலை
துரைப்பாக்கம்: சென்னை அடுத்த கொட்டிவாக்கம் இளங்கோ நகர் தெற்கு காந்தி தெருவை சேர்ந்தவர் மதுரமுத்து (28). மனைவி கிறிஸ்டிலா சாந்த ஸ்வரூபினி (24). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதம் ஆகிறது. கிறிஸ்டிலா, தற்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்றிரவு மாமியாருடன் கிறிஸ்டிலாவுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த கிறிஸ்டிலா, கதவை பூட்டி கொண்டு புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/11/2025 1:54:06 PM
-Updated 11/11/2025 1:46:26 PM
-Updated 11/11/2025 12:57:53 PM
-Updated 11/11/2025 12:54:57 PM
-Updated 11/11/2025 12:50:29 PM
-Updated 11/11/2025 12:26:02 PM
-Updated 11/11/2025 12:25:41 PM
-Updated 11/11/2025 12:17:46 PM
-Updated 11/11/2025 12:14:43 PM
-Updated 11/11/2025 11:21:52 AM
-Updated 11/11/2025 11:13:24 AM
-Updated 11/11/2025 11:09:46 AM
-Updated 11/11/2025 11:09:21 AM
-Updated 11/10/2025 2:00:29 PM
-Updated 11/10/2025 2:00:11 PM