அமைச்சர் கோகுல இந்திரா சார்பில் கருணாநிதி மீது அவதூறு வழக்கு
சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா சார்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆக.23ம் தேதி நாளிட்ட முரசொலி நாளிதழில் கலைஞர் கேள்வி-பதில்கள் என்ற செய்தியில், Ôவனத்துறை அமைச்சர் பச்சைமாளுக்கு அவரது மனைவியும் கோகுல இந்திராவுக்கு அவரது கணவரும்தான¢ சேனல்கள்Õ என்று கூறப்பட்டுள்ளது. இது, அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதைப்போல் ஆனந்த விகடன் பதிப்பாளர், பிரின்டர், செய்தியாளர் ஆகியோர் மீதும் தனியாக ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/18/2012 5:57:02 PM
-Updated 10/18/2012 5:56:44 PM
-Updated 10/18/2012 5:56:12 PM
-Updated 10/18/2012 5:54:44 PM
-Updated 10/18/2012 4:42:18 PM
-Updated 10/18/2012 4:30:20 PM
-Updated 10/18/2012 4:29:21 PM
-Updated 10/18/2012 4:28:46 PM
-Updated 10/18/2012 3:48:53 PM
-Updated 10/18/2012 3:48:07 PM
-Updated 10/18/2012 3:47:21 PM
-Updated 10/18/2012 3:46:47 PM
-Updated 10/18/2012 3:17:48 PM
-Updated 10/18/2012 12:58:50 PM
-Updated 10/18/2012 12:50:43 PM