2012
30
Sep
மாணவி திடீர் மாயம்


ஆவடி: காலாண்டு விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த மாணவி திடீரென மாயமாகிவிட்டார். ஆவடி ஸ்ரீதேவி நகர் பாரதி தெருவில் வசிப்பவர் சுந்தரிபாய். புதுக்கோட்டையில் தங்கியிருந்து குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றுகிறார். இவரது மகள் சண்முகபிரியா (15). திருச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, 10ம் வகுப்பு படிக்கிறார். காலாண்டு விடுமுறைக்கு தாயும் மகளும் ஆவடிக்கு வந்திருந்தனர். வீட்டில் இருந்து நேற்று காலை கடைக்கு சென்ற சண்முகபிரியா பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. பதறிப்போன சுந்தரிபாய் மகளை பல இடங்களில் தேடினார். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆவடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முக பிரியாவை யாராவது கடத்திச்சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
T20 World Cup 2012,ICC World Cup Twenty20 2012,Twenty20 2012,Twenty20 2012 Schedule,Twenty20 2012 Venues,Twenty20,Twenty20 in Tamil