கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்
பெங்களூர்: பெங்களூரிலிருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்றிரவு சரியாக 9.45 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. 10.10 மணிக்கு கே.ஆர்.புரம் ரயில்நிலையத்துக்கு வந்தது. 5 நிமிடத்துக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே ஏசி 3 டயர் பெட்டியிலிருந்து கரும்புகை வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒயிட்பீல்டு ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனை வரும் ரயிலை விட்டு இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் தீயணைப்புக் கருவிகள் உதவியுடன் ஏசி 3 டயர் பெட்டியில் பரவிய தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதன்பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், பயணத்தை தொடர்ந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/31/2012 6:38:56 PM
-Updated 5/31/2012 6:16:13 PM
-Updated 5/31/2012 5:52:20 PM
-Updated 5/31/2012 4:02:22 PM
-Updated 5/31/2012 3:51:37 PM
-Updated 5/31/2012 3:51:11 PM
-Updated 5/31/2012 3:50:49 PM
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM