கலெக்டர் அலுவலகம் முன்பு 9 பேர் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் குறை கேட்பு கூட்டம் நடைபெறும். சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி நல்லதம்பி (55), அவரது மகன்கள் சக்திவேல், சதிஷ், காந்தி மகள்கள் அஞ்சலை, காமாட்சி, மீனா, வசந்தா, சத்தியா ஆகிய 9 பேரும் இன்று கூட்டத்துக்கு வந்தனர். ‘ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் மனைப்பட்டா வழங்குவதற்காக கையகப்படுத்தப்பட்ட எங்கள் நிலத்தை மீட்டு தரவேண்டும்’ என்று கூறியபடி, கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் மண்ணெண்ணையை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கலெக்டரிடம் அழைத்து சென்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் சென்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/3/2025 12:32:09 PM
-Updated 6/3/2025 12:31:38 PM
-Updated 6/3/2025 12:22:12 PM
-Updated 6/3/2025 11:30:48 AM
-Updated 6/3/2025 11:30:30 AM
-Updated 5/31/2012 6:38:56 PM
-Updated 5/31/2012 6:16:13 PM
-Updated 5/31/2012 6:12:33 PM
-Updated 5/31/2012 5:52:20 PM
-Updated 5/31/2012 4:02:22 PM
-Updated 5/31/2012 3:51:37 PM
-Updated 5/31/2012 3:51:11 PM
-Updated 5/31/2012 3:50:49 PM
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM