ஆலங்குடி : புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்த அணவயலை சேர்ந்தவர் செல்லத்துரை(60). இவரது மனைவி ராணி(50). செல்லதுரை அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை வரை வீட்டின் கதவு திறக்காமல் இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டில் செல்லதுரை கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். ராணி தலைமறைவானது தெரியவந்தது. இதனால் அவர் தான் கணவனின் கொடுமை தாங்காமல் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ராணியை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2011 4:55:48 PM
-Updated 11/27/2011 4:55:36 PM
-Updated 11/27/2011 1:57:18 PM
-Updated 11/27/2011 1:57:09 PM
-Updated 11/26/2011 3:28:02 PM
-Updated 11/26/2011 3:21:17 PM
-Updated 11/26/2011 3:04:27 PM
-Updated 11/26/2011 2:48:54 PM
-Updated 11/26/2011 2:40:15 PM
-Updated 11/26/2011 2:39:57 PM
-Updated 11/26/2011 2:37:57 PM
-Updated 11/26/2011 2:30:47 PM
-Updated 11/26/2011 2:14:16 PM
-Updated 11/26/2011 2:14:03 PM
-Updated 11/26/2011 2:10:34 PM