2011
12
Jan
மந்தவெளியில் என்எல்சி பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

சென்னை, - மந்தைவெளி ராஜா தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கவிதா(52). என்எல்சியில் அதிகாரியாக பணிபுரிகிறார். நேற்று இரவு மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மந்தைவெளி நார்ட்டன் ரோட்டில் செல்லும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் ஆசாமி கவிதா கழுத்தில் கிடந்த 11 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடினான். இதனால் கூச்சல் போட்டார். திருடன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான். இதுதொடர்பாக கவிதா பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த