கார் மோதி 2 விவசாயிகள் பலி
ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஆழிவாய்க்கால் தெற்கு நத்தத்தை சேர்ந்தவர் மதியழகன்(40). அருகில் உள்ள பஞ்சநதிக்கோட்டையை சேர்ந்தவர் ஓந்து(36). இருவரும் விவசாயிகள். நள்ளிரவில் நத்தம் அருகே வயலில் தண்ணீர் பாய்ச்ச வந்தனர்.போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருந்தது. விவசாயிகள் இருவரும் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மதுக்கூரில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக வல்லம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென 2 விவசாயிகள் மீதும் மோதிவிட்டு வேகமாகசென்று ரோட்டோரம் உள்ள மரத்தில் மோதியது.கார் மோதியதில் விவசாயிகள் மதியழகனும், ஓந்துவும் அந்த இடத்திலேயே இறந்தனர். கார் மரத்தில் மோதியதில் காரில் இருந்தவர்களும் காயமடைந்தனர். கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து பற்றி தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் அங்கு சென்று 2 பேரின் சடலங்களையும் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.