சமந்தா எளிதில் பழகும் குணம் கொண்டவர்
சமந்தா எளிதில் பழகும் குணம் கொண்டவர். படப்பிடிப்பில் ஹீரோக்கள் முதல் கடைசி நடிகர் வரை நட்புடன் பழகுவார். குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். படப்பிடிப்பு நேரத்தில் அவரை பார்க்க யாராவது குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தால் உடனே குழந்தையை வாங்கி கொஞ்ச ஆரம்பித்து விடுவார். தற்போது தெலுங்கில் மகேஷ்பாபு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்த மகேஷ்பாபுவை காண அவரது குழந்தை சித்தாரா வந்தார். சமந்தாவுக்கு குழந்தையை அறிமுகம் செய்துவைத்தார் மகேஷ். கொஞ்சி கொஞ்சி பேசி சித்தாராவை தன் பாசவலைக்குள் இழுத்துக்கொண்டார் சமந்தா. இப்ேபாதெல்லாம் ஷூட்டிங் சென்றால் சமந்தாவை பார்க்கத்தான் முதலில் ஓடுகிறாராம் சித்தாரா. அவருக்கு சாக்லேட் கொடுத்து பாசப்பிணைப்பை அதிகப்படுத்திக்கொள்கிறார் சமந்தா.