கேன்சரால் பாதித்து மீண்டவர்கள்
கேன்சரால் பாதித்து மீண்டவர்கள் கவுதமி, மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ். மீண்டும் முன்புபோல் நடிப்பில் கவனம் செலுத்துகின்றனர். இதற்கிடையில் கேன்சர் நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லைஃப் அகெய்ன் பவுண்டேஷன் அமைப்பை தொடங்கினார் கவுதமி. சமீபத்தில் உலக அளவில் இதனை அறிமுகப்படுத்தும் வகையில் சிகாகோவில் கமல் தொடங்கி வைத்தார். மம்தா மோகன்தாஸ், நடிகர் ஜெகபதி பாபு உள்ளிட்ட செலபரிட்டிகள் பலர் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் இவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த அமைப்பிலிருந்து விலகுவதாக ஜெகபதி பாபு தனது இணைய தள ஃபேஸ்புக் பக்கத்தில் திடீரென அறிவித்ருக்கிறார். ‘லைஃப் அகெய்ன் அமைப்பில் என்னால் நீடிக்க முடியாததற்காக வருத்தமுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார். விலகுவதற்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபு தமிழில், ‘லிங்கா’, ‘புத்தகம்’, ‘தாண்டவம்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.