இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பாஜ தொண்டர்கள் மீது தடியடி மேற்கு வங்கத்தில் பரபரப்பு

10/21/2016 2:54:57 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


கொல்கத்தா, -மத்திய அமைச்சர் மீது திரிணாமுல் தொண்டர்கள் கல்வீசி தாக்கியதை கண்டித்து பாஜ கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேற்கு வங்கத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, பாஜ நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை மீட்பதற்காக  மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தலைமையில் பாஜ நிர்வாகிகள் ஊர்வலமாக காவல் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது அமைச்சர் மீது திரிணாமுல் தொண்டர்கள் கற்களை வீசி தாக்கினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாபுல் சுப்ரியோ தனது டுவிட்டரில், ‘இந்த சம்பவத்திற்கு பின்னால் முதல்வர் மம்தாவின் திரிணாமுல் அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர் மலாய் கட்டாக்கின் சதி உள்ளது’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜ எம்பி ரூபா கங்குலி, தேசிய செயலாளர் ராகுல் சின்கா ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் நேற்று கொல்கத்தாவில் உள்ள முதல்வர் மம்தா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் ஹசரா பகுதியில் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தில் 13 போலீசார் மற்றும் 4 தொண்டர்கள் காயமடைந்தனர். போலீசார் மீது கல்வீசி தாக்கியதால்தான் தடியடி நடத்த நேர்ந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இதை பாஜ எம்பி ரூபா கங்குலி மறுத்துள்ளார். ‘‘பாஜவினர் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தினர். திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்பதைத்தான் போலீசாரின் நடவடிக்கை காட்டுகிறது’’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ்



  • ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்



  • 15 வீரர்களுக்கு வீர தீர விருது : பிரதமர் ராணுவ தின வாழ்த்து



  • பினாகா ராக்கெட் சோதனை வெற்றி



  • சிபிஐக்கு தலைவர் யார்? 16ல் தேர்வுக்குழு ஆலோசனை



  • தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் கோவாவின் முதல்வராக பரிக்கருக்கு மீண்டும் வாய்ப்பு: நிதின் கட்கரி சூசக தகவல்



  • நிலம் கையகப்படுத்தும் விவகாரம் அரியானா விவசாயிகள் சீன பிரதமருக்கு கடிதம்: மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சி



  • கன்னியாகுமரியில் பாரதமாதா கோயில் திறப்புவிழா: ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க மோடி உறுதி



  • மகர சங்கராந்தி விருந்துக்கு பா.ஜ தலைவர்களுக்கு நிதிஷ் திடீர் அழைப்பு



  • பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம.பி. முதல்வர் வலியுறுத்தல்



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]