இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இளம்பெண்களுடன் இருப்பதை காட்டி வருண்காந்தியை பிளாக்மெயில் செய்து ராணுவ ரகசியங்கள் வெளியீடு? - அமெரிக்க வக்கீல் ‘திடுக்’ புகார்

10/21/2016 2:50:22 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்

புதுடெல்லி, - இந்திய ராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான ரகசியங்களை பாஜ எம்.பி. வருண் காந்தி  கசிய விட்டார் என்றும், அவரை சர்வதேச ஆயுத புரோக்கர் பிளாக்மெயில் செய்து இதை பெற்றிருக்கிறார் என்றும் ‘திடுக்’ குற்றச்சாட்டை நியூயார்க்கை சேர்ந்த வக்கீல் ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
நியூயார்க்கைச் சேர்ந்த வக்கீல் எட்மோன்ஸ் ஆலன் என்பவர், கடந்த மாதம் 16ம் தேதியன்று இந்திய பிரதமர்  அலுவலகத்துக்கு  ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘‘பாதுகாப்பு ஆலோசனைக்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினரான பாஜ எம்.பி. வருண் காந்தியை, சர்வதேச ஆயுத புரோக்கர் அபிஷேக் வர்மா மற்றும் சில ஆயுதத் தயாரிப்பு  நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பிளாக்மெயில் செய்து இந்தியாவின் ஆயுதத் கொள்முதல்  ஒப்பந்தங்கள் தொடர்பான பல ரகசியத் தகவல்களைப் பெற்றிருக்கிறார்கள். இளம்பெண்கள் மற்றும் வெளிநாட்டு பாதுகாவலர்களுடன் வருண்காந்தி இருப்பது போன்ற புகைப்படங்களை காட்டியே அவரை மிரட்டியிருக்கிறார்கள்’’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடிதத்தை எழுதிய எட்மோன்ஸ் ஆலனும், அபிஷேக் வர்மாவும் முன்பு தொழில் பங்குதாரர்களாக இருந்தனர். 2012ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.  2006ம் ஆண்டு கடற்படைத் தலைமையகத்தில் இருந்த ரகசிய ஆவணங்கள்  திருடப்பட்ட வழக்கில் அபிஷேக் வர்மா மீது ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்வராஜ் அபியான் கட்சியின் தலைவர்கள் பிரசாந்த் பூஷண்,  யோகேந்திர யாதவ் ஆகியோர், ராணுவ ரகசியங்கள் ‘லீக்’ ஆகி விட்டதாகவும், பிரதமர் இதில் என்ன நடவடிக்கை எடுக்கப் ேபாகிறார் என்றும் கேள்வி எழுப்பினர். அவர்கள் வருண்காந்தி பெயரை குறிப்பிடாவிட்டாலும் வக்கீல் எட்மோன்ஸ் எழுதிய கடிதத்தின் நகலை நிருபர்களிடம் அளித்தனர்.மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘அனைத்து விவரங்களும் தெரிந்த பிறகும் இதில் தொடர்புடைய பிரான்ஸ் நாட்டின் தேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதை மத்திய அரசு  நிறுத்தவில்லை. ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலை அந்த நிறுவனம்தான் இப்போது  இந்தியாவுக்கு வழங்கி வருகிறது’’ என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும் சில
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ்



  • ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்



  • 15 வீரர்களுக்கு வீர தீர விருது : பிரதமர் ராணுவ தின வாழ்த்து



  • பினாகா ராக்கெட் சோதனை வெற்றி



  • சிபிஐக்கு தலைவர் யார்? 16ல் தேர்வுக்குழு ஆலோசனை



  • தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் கோவாவின் முதல்வராக பரிக்கருக்கு மீண்டும் வாய்ப்பு: நிதின் கட்கரி சூசக தகவல்



  • நிலம் கையகப்படுத்தும் விவகாரம் அரியானா விவசாயிகள் சீன பிரதமருக்கு கடிதம்: மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சி



  • கன்னியாகுமரியில் பாரதமாதா கோயில் திறப்புவிழா: ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க மோடி உறுதி



  • மகர சங்கராந்தி விருந்துக்கு பா.ஜ தலைவர்களுக்கு நிதிஷ் திடீர் அழைப்பு



  • பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம.பி. முதல்வர் வலியுறுத்தல்



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]