இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரீட்டா பகுகுணா துரோகி காங்கிரஸ் கடும் தாக்கு

10/21/2016 2:49:45 PM
ஸ்ரீரங்கம் கோயிலில் வேடுபறி: பக்தர்கள் குவிந்தனர் மதுரை முனியாண்டி கோயிலில் 100 கிடா வெட்டி உணவு திருவிழா


புதுடெல்லி, - பாஜவுக்கு தாவியதன் மூலம் ரீட்டா பகுகுணா, காங்கிரசுக்கு துரோகம் இழைத்திருக்கிறார் என்று உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அங்கு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ரீட்டா பகுகுணா கட்சியின் முதல்வர்  வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கூறப்பட்டது. ஆனால், ஷீலா தீட்சித்தை  முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில் அதிருப்தியடைந்த  ரீட்டா பகுகுணா நேற்று டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்துக்கு சென்று, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘பாக். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமரை நாடே பாராட்டுகிறது. ஆனால், ராகுல்காந்தி அதை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார்’’ என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
 ரீட்டா பகுகுணா மீது காங்கிரஸ் தலைமை முழு நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால், அவர் துரோகியாகி விட்டார். அவர் தனது குடும்பத்தினரைப்  போலவே கட்சி தாவி விட்டார்.  இதற்கு முன்பு உத்தரகண்ட் மாநிலத்தில் ரீட்டா பகுகுணாவின் சகோதரர்  விஜய் பகுகுணா, காங்கிரஸில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். அதனால்,  அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  இதேபோல், ரீட்டா பகுகுணா வெளியேறியதால்  காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
 உத்தரப்  பிரதேசத் தேர்தலில் வெற்றி  பெறுவது சந்தேகம் எனக் கருதி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த துரோகிகளை பாஜ  தனது கட்சியில் சேர்த்து வருகிறது. மேலும், இம்மாநிலத்தில் பாஜவுக்கு 71 எம்.பி.க்கள் உள்ளபோதிலும், தங்கள்  கட்சி தலைவர்கள் மீது அக்கட்சி நம்பிக்கையை இழந்து, பிற  கட்சிகளில் இருப்பவர்களை இழுத்து வருகிறது.
இவ்வாறு ராஜ் பாப்பர் கூறினார்.

மேலும் சில
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ்



  • ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்



  • 15 வீரர்களுக்கு வீர தீர விருது : பிரதமர் ராணுவ தின வாழ்த்து



  • பினாகா ராக்கெட் சோதனை வெற்றி



  • சிபிஐக்கு தலைவர் யார்? 16ல் தேர்வுக்குழு ஆலோசனை



  • தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் கோவாவின் முதல்வராக பரிக்கருக்கு மீண்டும் வாய்ப்பு: நிதின் கட்கரி சூசக தகவல்



  • நிலம் கையகப்படுத்தும் விவகாரம் அரியானா விவசாயிகள் சீன பிரதமருக்கு கடிதம்: மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சி



  • கன்னியாகுமரியில் பாரதமாதா கோயில் திறப்புவிழா: ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க மோடி உறுதி



  • மகர சங்கராந்தி விருந்துக்கு பா.ஜ தலைவர்களுக்கு நிதிஷ் திடீர் அழைப்பு



  • பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம.பி. முதல்வர் வலியுறுத்தல்



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]