காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 22 பேர் பலி
10/21/2016 2:47:52 PM
ஜம்மு, -காஷ்மீர் மாநிலம் ரியாசி பகுதியில் இருந்து பக்லே பகுதியை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று நேற்று மாலை மலைச்சாலையில் சென்று கொண்டு இருந்தது. கோர்கே பிட்டா என்ற இடத்தில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பஸ் நொறுங்கியது. இந்த தகவல் ராணுவத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விரைந்து சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டது. எனினும், பஸ் கவிழ்ந்த விபத்தில் 12 பெண்கள் உள்பட 22 பயணிகள் உயிரிழந்தனர். 32 பேர் படுகயாம் அடைந்தனர்.