வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவரை வெட்டி நகை பறிப்பு
10/21/2016 2:47:32 PM
ஊத்துக்கோட்டை, -வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவரை வெட்டி நகை பறித்து தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பூரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (66). இவர், நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் வீட்டின் உள்தாழ்பாளை உடைத்து புகுந்தனர். சத்தம் கேட்டு எழுந்த தெய்வசிகாமணி, ஆசாமிகளை பார்த்ததும் கூச்சலிட்டார். ஆத்திரமடைந்த ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் முதியவரை வெட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரத்தை பறித்து கொண்டு தப்பினர்.அப்பகுதியை சேர்ந்த பழனி என்பவர் காற்றுக்காக வீட்டின் வெளியே தூங்கியுள்ளார். அங்கு சென்ற ஆசாமிகள், நைசாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ₹20 ஆயிரம் ரொக்கப்பணத்தை எடுத்து கொண்டு தப்பிவிட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.