இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னை அருகே ஓட்டேரியில் மேம்பால பணிக்காக கட்டிடங்கள் இடிப்பு

10/21/2016 2:46:16 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


கூடுவாஞ்சேரி, -சென்னை வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் ரூ.30 கோடியில் ரயில்வே மேம்பால பணி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரயில்வே கேட்டும் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. இதனால் ஓட்டேரி, வண்டலூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எளிதில் சென்று வந்த மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர ஆபத்துக்குகூட ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை. இதனால் ஊரப்பாக்கத்துக்கும், வண்டலூருக்கும் சுற்றிக்கொண்டு வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரதாஸ், உதவி பொறியாளர் ஜெயக்குமார், செங்கல்பட்டு தாசில்தார் பரிமளவதனி, துணை தாசில்தார் பாலாஜி, வண்டலூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் செந்தமிழ்செல்வி, விஏஓ சீனிவாசன் ஆகியோர் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த குடியிருப்பு கட்டிடங்களை வண்டலூர் டிஎஸ்பி முகிலன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நேற்று இடித்துதள்ளினர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது;

ஏற்கனவே மேம்பால பணிக்காக இப்பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் ஊரப்பாக்கம் மேம்பாலம் அருகில் இடம் ஒதுக்கி தரப்பட்டது. தற்போது மேம்பாலப்பணிக்கு இடையூறாக இருந்த மீதமுள்ள கட்டிடங்களை இடித்துள்ளோம்.2 ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய மேம்பாலப்பணி 6 ஆண்டுகளாக தாமதமாக நடைபெற்று வருவதற்கு காரணம் நாங்கள் அல்ல. இன்னும் 4 மாதத்தில் மேம்பால பணி முடிந்துவிடும்.
இவ்வாறு கூறினர்.

மேலும் சில
  • நாமக்கல் அருகே பரபரப்பு : தண்டவாளத்தில் கல்லை போட்டு ரயிலை கவிழ்க்க சதி



  • ஜல்லிகட்டு வீரர்கள் மீது போலீஸ் தடியடி : தென் மாவட்டங்களில் பதற்றம்



  • பொள்ளாச்சி அருகே பைக் மீது லாரி மோதி 3 மாணவர்கள் சாவு



  • தமிழகம் முழுவதும் மார்ச் 31க்குள் 1000 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்: 6 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்?



  • மனைவி தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி



  • தீபாவுக்கு ஆதரவாக புதிய கட்சி துவக்கம்



  • விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பொங்கல் தினத்தில் திருவாரூரில் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு



  • கடலூர் அருகே கார் மீது லாரி மோதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி



  • சினிமா தியேட்டர்களில் பொங்கலுக்கு 5 காட்சிகள்



  • கூடுவாஞ்சேரியில் பிரியதர்ஷினி செல்போன் ஷோரூம் திறப்பு



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]