இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கு கத்திக்குத்து - 8 ேபர் மீது வழக்கு

10/21/2016 2:45:47 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


தூத்துக்குடி, -தூத்துக்குடியில் கோர்ட் வளாகத்தில் வக்கீலை கத்தியால் குத்திய சம்பவத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி வக்கீல் சங்கத்திற்கு நாளை (22ம்தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றிரவு வக்கீல்கள் சிலர் கோர்ட் வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியில் வந்து கொண்டிருந்தனர். கோர்ட் நுழைவாயில் அருகே அவர்கள் வரும் போது எதிரே வேறு சில வக்கீல்களும் வந்துள்ளனர்.

சங்க நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் தூத்துக்குடி அசோக் நகரைச் சேர்ந்த வக்கீல் ரகுராமன் (43) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த அவர், தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி 8பேர் மீது  வழக்குபதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தையொட்டி கோர்ட் வளாகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வக்கீல் ரகுராமன் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை வக்கீல் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோர்ட் வளாகத்திலேயே வக்கீலுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • சீர்காழி அருகே பயங்கரம் காதலனுடன் குடும்பம் நடத்திய நர்சிங் மாணவிக்கு சரமாரி வெட்டு



  • மாஜி அமைச்சர் கொலை: போலீஸ்காரர் சஸ்பெண்ட்



  • மாணவர் கொலை; விவசாயி கைது



  • ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் இருந்து உயர் அழுத்த மின் கம்பி மீது தூக்கி வீசி இன்ஜினியர் கொலை



  • பாரிமுனையில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் - பஸ்சில் கல்லூரி மாணவர்கள் மோதல் கட்டை, இரும்பு பைப்பால் தாக்குதல்



  • கர்ப்பிணி கொலை: காதலன் கைது



  • மாஜி அமைச்சர் சிவக்குமார் கொலை சரணடைந்த 4 வாலிபர்களை கஸ்டடியில் விசாரிக்க முடிவு



  • கணவனை கொல்ல முயன்ற கள்ளக்காதல் ஜோடியை மரத்தில் கட்டிவைத்து சரமாரி அடி, உதை



  • மின் இணைப்பு மாற்ற ரூ.3000 லஞ்சம்: பொறியாளர் கைது



  • மனைவி கழுத்தறுத்து கொலை தொழிலாளிக்கு ஆயுள் சிறை



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]