பேஸ்புக் தோழியை காண பர்தா அணிந்த வாலிபர்
10/21/2016 2:36:26 PM
கோபி, -ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் நேற்று மதியம் பர்தா அணிந்தபடி சென்றவரின் மீது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட பொதுமக்கள் அந்த நபரை பின் தொடர்ந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் அணிந்திருந்த பர்தாவை கழற்றிய போது தான் அந்த நபர் பெண் அல்ல ஆண் என்பது தெரியவந்தது. பொதுமக்கள் அவரை பிடித்து கவுந்தப்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கும்பகோணத்தை சேர்ந்த அகமதுகபீர்(25) என்பது தெரியவந்தது. பேஸ்புக்கில் பவானியை சேர்ந்த இளம் பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண் அகமது கபீரை சந்திப்பதற்காக கவுந்தப்பாடிக்கு வரச்சொல்லியதாக கூறப்படுகிறது. இளம்பெண்ணை தேடி வந்த போது தான் பொதுமக்களிடம் சிக்கி உள்ளார். இதை தொடர்ந்து அகமதுகபீர் சந்திக்க வந்ததாக கூறப்பட்ட பெண்ணையும் அழைத்து விசாரித்தனர். அப்போது அகமதுகபீர் கூறியது உண்மை என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.