இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கயத்தாறு அருகே பஸ்சுக்கு காத்திருந்த பெண் மின்னல் தாக்கி சாவு - 15 ஆடுகளும் பலியான பரிதாபம்

10/21/2016 2:36:05 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்



கயத்தாறு, -கயத்தாறு அருகே பஸ்சுக்காக காத்திருந்த பெண், மின்னல் தாக்கியதில்  உயிரிழந்தார். இதே போல் மற்றொரு இடத்தில் மின்னல் தாக்கியதில் 15 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. நெல்ைல திருவேங்கடத்தில் ஒரு பசு இறந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த திருமலாபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மனைவி லட்சுமி (45). இவரும், அதே ஊரைச் சேர்ந்த அய்யம்மாள் (57), குருசாமி மகள் அபிநயா (9) ஆகிய 3 பேரும் தீபாவளியை முன்னிட்டு ஜவுளி எடுக்க முடிவு செய்தனர். இதற்காக கயத்தாறு செல்ல பஸ்சை எதிர்பார்த்து திருமலாபுரம் விலக்கில் நேற்று மாலை காத்திருந்த போது இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது இவர்கள் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அய்யம்மாளும், அபிநயாவும் படுகாயமடைந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் அய்யம்மாள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மின்னல் தாக்கி இறந்த லட்சுமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மற்றொரு சம்பவம்: கயத்தாறு அருகேயுள்ள சன்னது புதுக்குடியைச் சேர்ந்தவர் உய்க்காட்டான் (45). இவர் தனக்குச் சொந்தமான 70 ஆடுகளை தனது மாமா ஆறுமுகத்துடன் அப்பகுதியில் மேய்க்கச் சென்றார். திரும்பி வந்தபோது பலத்த மழை பெய்தது.இதனால் ஊருக்கு தெற்கே சாஸ்தா கோயில் அருகேயுள்ள ஆலமரத்தின் கீழே ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் உய்க்காட்டனுக்கு சொந்தமான 15 ஆடுகள் துடிதுடித்து இறந்தன. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.

மேலும் சில
  • நாமக்கல் அருகே பரபரப்பு : தண்டவாளத்தில் கல்லை போட்டு ரயிலை கவிழ்க்க சதி



  • ஜல்லிகட்டு வீரர்கள் மீது போலீஸ் தடியடி : தென் மாவட்டங்களில் பதற்றம்



  • பொள்ளாச்சி அருகே பைக் மீது லாரி மோதி 3 மாணவர்கள் சாவு



  • தமிழகம் முழுவதும் மார்ச் 31க்குள் 1000 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்: 6 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்?



  • மனைவி தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி



  • தீபாவுக்கு ஆதரவாக புதிய கட்சி துவக்கம்



  • விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பொங்கல் தினத்தில் திருவாரூரில் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு



  • கடலூர் அருகே கார் மீது லாரி மோதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி



  • சினிமா தியேட்டர்களில் பொங்கலுக்கு 5 காட்சிகள்



  • கூடுவாஞ்சேரியில் பிரியதர்ஷினி செல்போன் ஷோரூம் திறப்பு



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]