இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

6 ரன்னில் நியூசிலாந்து த்ரில் வெற்றி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - டோனி வேதனை

10/21/2016 2:24:35 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்

புதுடெல்லி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன் மட்டுமே எடுத்தது. பின்னர் பேட் செய்த இந்தியா 49.3 ஓவர்களில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 41, டோனி 39 ரன் எடுத்தனர். 9வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா-உமேஷ் யாதவ் ஜோடி 49 ரன் சேர்த்து போராடியது. 8 பந்துகளுக்கு 11 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பந்தை தூக்கி அடித்து பாண்ட்யா ஆட்டமிழந்தார். அவர் 36 ரன் எடுத்தார். அதன்பின் உமேஷ் யாதவ் 4 ரன் சேர்த்தார். ஆனால் பும்ரா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்டாகி கடைசி விக்கெட்டாக அவுட்டானார். உமேஷ் யாதவ் 18 ரன்னுடன் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3, குப்தில், போல்ட் தலா 2, சாண்ட்னர், ஹென்ரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 தோல்வி குறித்து இந்திய கேப்டன் டோனி கூறுகையில், நான் அதிரடியாக விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்கும்போது, இது எளிதான காரியம் அல்ல. பெரிய ஷாட்களை விளையாட விரும்பும்போது, மறுமுனையில் விக்கெட் சரிந்தால், மீண்டும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க வேண்டியது அவசியமாகிறது. 310 ரன் போன்ற பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய முயற்சிக்கும்போது, மன நிலை வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் 240-245 போன்ற ரன்னை, சற்றே கடினமான டிராக்கில் சேஸ் செய்ய முயற்சிக்கும்போது, அது வேறு மாதிரியாக இருக்கும். வில்லியம்சனின் 2 கேட்சுகளை வேறு தவற விட்டு விட்டோம். இது மட்டுமின்றி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். அதே சமயத்தில் நாங்களும் நன்றாகவே பந்து வீசினோம். அமித் மிஸ்ரா முக்கியமான சில விக்கெட்டுகளை (வில்லியம்சன், டெய்லர், கோரி ஆண்டர்சன்) கைப்பற்றினார் என்றார்.  118 ரன் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், எங்களின் பந்து வீச்சே வெற்றிக்கு காரணமாக அமைந்தது. டிரண்ட் பவுல்டின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது என்றார்.  5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கும் நிலையில், 3வது போட்டி வரும் 23ம் தேதி மொகாலியில் நடைபெறுகிறது.

மேலும் சில
  • டோனி, யுவராஜ் 4, 5வது இடத்தில் ஆட வேண்டும் - கபில்தேவ் கருத்து



  • இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் எளிதல்ல - அஸ்வின் பேட்டி



  • நெருக்கடியில் பாகிஸ்தான் அணி



  • ஐபிஎல் தொடரில் விளையாட இங்கிலாந்து வீரர் விருப்பம்



  • இந்தியா-இங்கிலாந்து தொடரை ரத்து செய்ய முயன்றாரா ஷிர்கே?



  • இந்திய ஏ அணியை வீழ்த்தியது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள ஐபிஎல் அனுபவம் உதவியது - சாம் பில்லிங்ஸ் பேட்டி



  • சிறந்த கேப்டன்களில் டோனியும் ஒருவர் - முரளிதரன்



  • பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுக்கு எதிராக கைது வாரன்ட் - கராச்சி நீதிமன்றம் அதிரடி



  • மலிங்காவுக்கு டெங்கு தெ.ஆ .தொடரில் விலகல்



  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனராக ஆடம்ஸ் நியமனம்



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]