இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இன்று உலக கோப்பை கபடி அரையிறுதி தாய்லாந்தை வீழ்த்தி பைனலுக்குள் நுழையுமா இந்தியா? - மற்றொரு போட்டியில் தென் கொரியா- ஈரான் மோதல்

10/21/2016 2:22:55 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


அகமதாபாத்: ஆடவர் 3வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஏ, பி  என இரு பிரிவாக  பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.  ‘ஏ’ பிரிவில் தென்கொரியா 5 போட்டிகளிலும் வெற்றியுடன் 25 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், இந்தியா 4ல் வெற்றிபெற்று 21 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.இந்த பிரிவில்  வங்கதேசம் 16 புள்ளி, இங்கிலாந்து 10 புள்ளி, ஆஸ்திரேலியா 5 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தையும், அர்ஜென்டினா புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறியது.
‘பி’ பிரிவில் தாய்லாந்து, ஈரான் அணிகள்  தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று சமநிலை பெற்றன. ஆனால் ரெய்டு புள்ளிகளில் தாய்லாந்து முதல் இடத்தையும், ஈரான் 2வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. கென்யா (16 புள்ளி) 3வது இடத்தையும், ஜப்பான் (12 புள்ளி) 4வது இடத்தையும், போலந்து (11 புள்ளி) 5வது இடத்தையும், அமெரிக்கா (0 புள்ளி) கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறின.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த தென்கொரியா- ‘பி’ பிரிவில் 2வது இடத்தை பிடித்த ஈரான் அணிகள் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு நடை பெறும் 2வது அரை இறுதியில் ‘ஏ’ பிரிவில் 2வது இடத்தை பிடித்த இந்தியா- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த தாய்லாந்துடன் மோதுகிறது. முதல் லீக் போட்டியில் தென்கொரியாவுடன் 32-34 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன்  இந்தியா, அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.  மறுபுறம் ஈரானுடன் மட்டும் தோல்வி அடைந்த தாய்லாந்து அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சொந்த மண்ணில் கூடுதல் பலத்துடன் ஆடும் இந்தியாவிற்கு   தாய்லாந்து கடும் நெருக்கடி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • டோனி, யுவராஜ் 4, 5வது இடத்தில் ஆட வேண்டும் - கபில்தேவ் கருத்து



  • இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் எளிதல்ல - அஸ்வின் பேட்டி



  • நெருக்கடியில் பாகிஸ்தான் அணி



  • ஐபிஎல் தொடரில் விளையாட இங்கிலாந்து வீரர் விருப்பம்



  • இந்தியா-இங்கிலாந்து தொடரை ரத்து செய்ய முயன்றாரா ஷிர்கே?



  • இந்திய ஏ அணியை வீழ்த்தியது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள ஐபிஎல் அனுபவம் உதவியது - சாம் பில்லிங்ஸ் பேட்டி



  • சிறந்த கேப்டன்களில் டோனியும் ஒருவர் - முரளிதரன்



  • பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுக்கு எதிராக கைது வாரன்ட் - கராச்சி நீதிமன்றம் அதிரடி



  • மலிங்காவுக்கு டெங்கு தெ.ஆ .தொடரில் விலகல்



  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனராக ஆடம்ஸ் நியமனம்



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]