கரூர் உட்பட 4 மாவட்ட டிஆர்ஓக்கள் அதிரடி மாற்றம்
10/18/2016 3:13:14 PM
சென்னை, -கரூர் உட்பட 4 மாவட்ட டிஆர்ஓக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வெளியிட்டுள்ள உத்தரவு:கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி அருணா, அங்கிருந்து மாற்றப்பட்டு சென்னை கலால் துறையின் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை சிறப்பு அதிகாரியாக உள்ள சூர்ய பிரகாஷ், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.வேலூர் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராக உள்ள ராமசாமி, புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதி திராவிடர் நலத்துறையில் இணை இயக்குநராக இருந்த பத்மஜா தேவி, அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கலால் துறையின் துணை கமிஷனராக இருந்த வேலு, பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதில் கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி, அருணா மாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சிக்கு இடைத்தேர்தல் நேற்று தான் அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அவர் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.