இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் பழைய வேட்பாளர்களுக்கு தடையா? - ராஜேஷ் லக்கானி விளக்கம்

10/18/2016 3:12:26 PM
ரயில் விபத்து இழப்பீடு புத்தாண்டில் உயர்கிறது ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோயிலில் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து

சென்னை, - தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 26ம் தேதி தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று நிருபர்களிடம் கூறியதாவது : மூன்று தொகுதிகளிலும் பணப் புழக்கத்தை தடுக்க பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் இன்று முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பறக்கும்படை, ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 3 அணியாக பிரிந்து ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஒரு அணியாக 24 மணி நேரமும் அந்தந்த தொகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.

வேட்புமனு தாக்கல் நவம்பர் 2ம் தேதி முடிகிறது. நவம்பர் 3ம் தேதி ஒரு தொகுதிக்கு தலா இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வருவார்கள். இவர்கள் வேட்பாளர்களின் செலவுக்கணக்குகளை துல்லியமாக கண்காணிப்பார்கள். ஏற்கனவே இந்த 3 தொகுதிகளிலும் போட்டியிட மனுதாக்கல் செய்தவர்கள், இந்த தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்கவில்லை.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.  அதனால் புதிய திட்டங்கள் எதுவும் அந்த தொகுதிக்குள் அரசு சார்பில் நடத்தக்கூடாது.  

டெல்லியில் நாளை முதல் 3 நாள் நடைபெறும் சர்வதேச தேர்தல் சட்டம் மற்றும் விழிப்புணர்ச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை நான் டெல்லி செல்கிறேன்.  வரும் சனிக்கிழமை தலைமை தேர்தல் ஆணையர்களை சந்திக்கவுள்ளேன். அப்போது தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கும் நடைபெறும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • அரக்கோணம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய டீசல்



  • சென்னை விமான நிலையத்தில் விஐபி.க்களை வரவேற்க ஆதார் கார்டு கட்டாயம் - ஜனவரி 1ம் தேதி முதல் அமல்



  • தலைவர் ஜி.கே.வாசன் 52வது பிறந்தநாள் - குடியரசு தலைவர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி



  • நக்சலைட் போல் பேசுகிறார் ராம மோகனராவ் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.11 முதல் 13ம் தேதி வரை 11,270 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அரசு அறிவிப்பு



  • மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய கரன்சி வைத்திருந்தால் அபராதம்; 4 ஆண்டு சிறை அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரம் சென்றார் தலைமை செயலாளர்



  • ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்முறையாக அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது - பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு?



  • ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை தமாகா சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம்



Facebook

Twitter

3 reel in a single day, finishing dubbing Rajini
ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]