இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோவையில் ₹3.90 கோடியுடன் கார் கடத்தலில் திருப்பம் - இன்ஸ்பெக்டர், எஸ்ஐ 2 ஏட்டுகளுக்கு தொடர்பு? ; தனிப்படை தீவிர விசாரணை

9/21/2016 3:22:39 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

கோவை, -கோவை அருகே ரூ.3.90 கோடியுடன் கார் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கரூரை சேர்ந்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் 2 ஏட்டுகளுக்கு ெதாடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அன்சர் சாதாத் (35). நகை வியாபாரி. இவரது நகை கடையில் ஊழியராக பணியாற்றும் முகமது (53), முஷீர் (35), சிதோஷ் (32), கார் டிரைவர் ஆனந்த் (29) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 25ம் ேததி சென்னையில் இருந்து கோவை வழியாக பாலக்காடு நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.

மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோட்டில், ஈச்சனாரி சுங்க வரி வசூல் மையம் தாண்டி சில மீட்டர் தூரத்தில் போலீஸ் சீருடையில் இருந்த 4 பேர் அந்த காரை மடக்கி விசாரித்தனர். பின்னர் அவர்கள் காரில் இருந்தவர்களை இறக்கி விட்டுவிட்டு காரை கடத்தினர். காரில் 3.90 கோடி ரூபாய் இருந்ததாக கூறப்பட்டது. கார் கடத்தப்பட்டது குறித்து நகைக்கடை அதிபர் அன்சர் சாதாத், மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி ரம்யா பாரதி உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட காரை பாலக்காட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைப்பற்றி கோவைக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சுபாஷ், சுதீர், சதிக் ஆகிய 3 வாலிபர்களை தனிப்படை போலீசார் நேற்று பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்தும் அவர்களிடம் விசாரணை நடந்தது. காரில் கடத்தப்பட்டது ஹவாலா பணம் என்பது உறுதியானது. மேலும் இந்த கடத்தலில் கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியை சேர்ந்த இன்ஸ்பெக்டர், குளித்தலை பகுதியை சேர்ந்த எஸ்ஐ மற்றும் 2 ஏட்டுகளுக்கு தொடர்பிருப்பதாக 3 பேரும் கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி அளித்த பிறகே சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரிக்கப்படும் என தனிப்படையினர் தெரிவித்தனர். இதன்மூலம் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம்.'

மேலும் சில
  • செலவு செய்ய கட்சியினர் தயாராக இல்லை - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக தயக்கம்



  • பெரியபாளையம் கோயில் 10வது வாரம் நிறைவு அம்மனுக்கு அபிஷேகம்



  • ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி நல்லக்கண்ணு தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்



  • அபராதம், நடவடிக்கை எதிரொலி - ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டம்



  • மு.க.ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு



  • உள்ளாட்சி தேர்தலையொட்டி டுவிட்டர் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையம் உத்தரவு



  • ரூ15 கோடிக்கு அமெரிக்காவில் விற்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் அரியலூர் வந்தது



  • தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை மாயம் - அதிகாரி பகீர்



  • காவிரி விவகாரத்தில் வன்முறை டேங்கர் லாரிகள் முடங்கியதால் கேஸ் தட்டுப்பாடு அபாயம்



  • தேயிலை தோட்டத்தில் தூங்கிய யானைகள் - வால்பாறையில் பரபரப்பு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]