‘கபாலி’ பலூன் வெடித்து 2 பேர் காயம் - ரஜினி ரசிகர்கள் மீது போலீசில் புகார்
9/21/2016 3:21:44 PM
திருச்சி, -ரஜினி நடித்த கபாலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது. பட விளம்பரத்துக்காக சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தியேட்டர் மாடியில் ராட்சத பலூன் கட்டி பறக்க விடப்பட்டு இருந்தது. தியேட்டர் ஊழியர்கள் ராட்சத பலுானை கீழே இறக்க முயற்சித்த போது திடீரென வெடித்தது. இதில் உறையூரை சேர்ந்த விக்னேஷ்(23), சிந்தாமணியை சேர்ந்த சிவகிருஷ்ணன்(25) ஆகியோர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பாதிக்கப்பட்ட வாலிபர்களின் பெற்றோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘காயம் அடந்தவர்களுக்கு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரூ.5 லட்சம் வரை செலவு ஆகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.
விபத்துக்கு ரஜினி ரசிகர்களான அக்பர் அலி, சபரி ஆகியோர் தான் காரணம். வீட்டில் உறங்கி கொண்டிருந்த எனது மகன்களை அவர்கள் தான் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விபத்தில் சிக்க வைத்தனர். காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்பதாக கூறினர். இதுவரை சிறுதொகை கூட பணம் கொடுக்க வில்லை’ என்று கூறியுள்ளனர். புகார் மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதை ெதாடர்ந்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.