இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

‘எங்களுக்கு யாரிடமும் சர்டிபிகேட் தேவையில்லை’ - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்

9/21/2016 3:21:17 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை



புதுடெல்லி, - ‘எங்களுக்கு யாரிடம் இருந்தும் சர்டிபிகேட் தேவையில்லை’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று ஒரு வழக்கு விசாரணையின் போது கோபமாக குறிப்பிட்டனர்.  நீதிபதிகளை நியமிப்பதற்கு சுதந்திரமான அமைப்பு  ஏற்படுத்த வேண்டுமென்று கோரி, ‘வெளிப்படையான நீதித்துறைக்கான தேசிய வழக்கறிஞர்கள் அமைப்பு’ என்ற சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில், ‘‘உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில்  நீதிபதிகள் பாரபட்சம் காட்டப்படுகிறது. சிபாரிசுகளின் அடிப்படையில் நியமனங்கள் நடக்கின்றன. எனவே, நேர்மையான, சுதந்திரமான அமைப்பு மூலம்  நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித்  ஆகியோர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் சார்பில், வக்கீல்கள் மாத்யூ நெடும்பரா, ஏ.சி.பிலிப் ஆகியோர் ஆஜராகி, நீதிபதிகளின் உறவினர்கள், நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இதனால், நீதிமன்ற நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதாக கூறினர். மேலும், நீதிபதிகள் நியமன நடைமுறை தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே நடக்கும் மோதல் பற்றி குறிப்பிட்டனர். இதைக் கேட்டு விட்டு நீதிபதிகள் கூறுகையில், ‘‘நீதிபதிகள் நியமன நடைமுறை இன்னும் அமலுக்கு வரவில்ைல. அதற்குள் ஏன் அதை பற்றி பேச வேண்டும். எங்களுக்கு யாரிடம் இருந்தும் சர்டிபிகேட் தேவையில்லை. உங்கள் கருத்து நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம், அதை பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. உங்கள் யோசனை அரசமைப்புச் சட்டத்தை  திருத்துவதற்கு ஒப்பான நடவடிக்கை, இதை உச்ச நீதிமன்றத்தால் செய்ய இயலாது’’  என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய நீதிபதிகள் நியமன  ஆணையம் என்ற புதிய அமைப்பை கொண்டு வந்தது. இதுதொடர்பாக புதிய சட்டத்தையும்  இயற்றியது. ஆனால், இந்த சட்டத்தையும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.



மேலும் சில
  • ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல்



  • ரயில்வேயில் இந்தி பயன்படுத்தப்படுகிறதா? கண்காணிக்க அதிகாரி நியமனம்



  • ‘‘என்னை பிரதமராக்குங்கள்’’ - ஆசம்கான் காமெடி



  • ஆந்திர புதிய தலைநகர் அமராவதி அக்.3ம் தேதி தொடக்கம்



  • 92 ஆண்டு வரலாறுக்கு முற்றுப்புள்ளி ரயில்வே பட்ஜெட் இனி இல்லை - நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு



  • காவிரி பிரச்னை தமிழக-கர்நாடக பஸ்கள் 17வது நாளாக முடக்கம்



  • காவிரி மேலாண்மை வாரியம் தொடங்குவது எப்போது? - மத்திய அரசு பரிசீலனை



  • மும்பை டான்ஸ் பார்களில் மது விற்க தடையில்லை - சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் - ராகுல் காந்தி குற்றம் சாட்டு



  • மூணாறு மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்தது - செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர் படுகாயம்



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]