இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இந்திய - இஸ்ரேல் கூட்டு தயாரிப்பான அதிநவீன பராக் ஏவுகணை 2வது நாளாக சோதனை

9/21/2016 3:19:12 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

பாலாசோர், - இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான அதிநவீன பராக்-8 ஏவுகணை இரண்டாவது நாளாக இன்று சோதனை செய்யப்படுகிறது.இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.)  மற்றும் இஸ்ரேல் விண்வெளி ஆய்வு நிறுவனம் இணைந்து பராக்-8 என்ற அதிநவீன ஏவுகணையை  உருவாக்கியுள்ளன. தரையிலிருந்து சென்று வான்வெளியில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையில்  இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனையை பல்வேறு கட்டங்களாக நடத்த  விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். அதன்படி, ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில்  உள்ள ஏவுதளத்தில் நேற்று காலை  10.13 மணிக்கு ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. அப்போது, குறிப்பிட்ட தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து  இலக்குகளையும் ஏவுகணை துல்லியமாகத் தாக்கியது. இதன் மூலம் இந்தச்  சோதனையானது வெற்றிபெற்றதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

 ஏற்கனவே, கடந்த ஜூன் 30ம் தேதி, ஜூலை 1ம் தேதி ஆகிய இருநாட்களில் பராக்-8 ஏவுகணை விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட்டிருந்தது. அதே போல், இந்தியா - இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான எம்ஆர்-சாம் ரக  ஏவுகணைகளின் பரிசோதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக  மேற்கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணைகள் நடுத்தர ரக ஏவுகணைகளாகும். இந்நிலையில், பராக்-8 ஏவுகணையை இன்றும் அதே தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்க்க உள்ளனர். இந்த பராக்-8 ஏவுகணையானது, கூடுதல் தொலைவில் உள்ள இலக்குகளையும்  வீழ்த்தும் திறன் கொண்டது. இந்த வகை ஏவுகணைகளின் செயல்பாடுகள், செல்லும்  தடங்கள் உள்ளிட்டவற்றை தரையிலிருந்தபடி கண்காணிக்க முடியும் என்று  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • செலவு செய்ய கட்சியினர் தயாராக இல்லை - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக தயக்கம்



  • பெரியபாளையம் கோயில் 10வது வாரம் நிறைவு அம்மனுக்கு அபிஷேகம்



  • ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி நல்லக்கண்ணு தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்



  • அபராதம், நடவடிக்கை எதிரொலி - ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டம்



  • மு.க.ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு



  • உள்ளாட்சி தேர்தலையொட்டி டுவிட்டர் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையம் உத்தரவு



  • ரூ15 கோடிக்கு அமெரிக்காவில் விற்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் அரியலூர் வந்தது



  • தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை மாயம் - அதிகாரி பகீர்



  • காவிரி விவகாரத்தில் வன்முறை டேங்கர் லாரிகள் முடங்கியதால் கேஸ் தட்டுப்பாடு அபாயம்



  • தேயிலை தோட்டத்தில் தூங்கிய யானைகள் - வால்பாறையில் பரபரப்பு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]