இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சேலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு கொள்ளை முயற்சி

9/21/2016 3:18:38 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

சேலம், -சேலம் ராமகிருஷ்ணாரோட்டில் அரசு போக்குவரத்து கழக டெப்போ செயல்பட்டு வருகிறது. வெளிஊர்களுக்கு செல்லும் பஸ்கள் 24 மணிநேரமும் வருவதும், போவதுமாகவே இருக்கும். இதன் எதிர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. ரோட்டை ஒட்டிய பகுதியில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2 மிஷனில் பணத்தை டெபாசிட் செய்யவும், 2 மிஷினில் பணத்தை எடுக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மையத்தின் இரவு காவலாளியாக ராமசாமி (63) என்பவர் பணியாற்றி வருகிறார். வெளிப்பகுதியில் இருக்கும் அவர், இன்று காலை 5.30 மணிக்கு ஏடிஎம் மையத்திற்குள் சென்றார். அங்கு ஏடிஎம் மிஷினின் கீழ்பகுதி வெட்டப்பட்டு இருந்தது. மிஷின் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், வங்கி அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் வெட்டப்பட்ட ஏடிஎம் மிஷினை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் ரூ.10 லட்சம் இருந்தது.நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த ஆசாமிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளனர். அதன்பிறகு ஏடிஎம் மிஷினை துளையிட்டுள்ளனர். ஆனால் அவர்களால் பணம் இருக்கும் பகுதியை தொடமுடியவில்லை. பின்னர் மிளகாய்பொடியை தூவிவிட்டு சென்றுள்ளனர். இந்த கொள்ளையில் 2க்கும் மேற்பட்ட ஆசாமிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து சென்னைக்கு பணம் கொண்டு சென்ற ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ₹5.78 கோடி கொள்ளை நடந்தது. அதைபோலவே இந்த ஏடிஎம் மிஷினிலும் துளையிடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் ஏடிஎம் மையத்தில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் போலீசாருக்கு பெருத்த சவாலாகவே கருதப்படுகிறது.

மேலும் சில
  • ஓட்டேரியில் வடமாநில வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து - மர்ம ஆசாமிக்கு தர்ம அடி



  • ₹4 கோடி ஹவாலா பணம் கொள்ளை - கோவை இன்ஸ்பெக்டர் விரைவில் கைது?



  • ஆலந்தூரில் வழிப்பறி செய்த 3 பேர் கைது - ஜாமீனில் வந்தவர்கள்



  • இலவச ஆட்டை விற்க மறுப்பு தலை துண்டித்து தாய் கொலை



  • 15 வயது மாணவி பலாத்காரம் காதலனுக்கு போலீஸ் வலை



  • புகைப்படத்தை மார்பிங் செய்து பெண்ணை மிரட்டியவர் கைது



  • ராசிபுரம் அருகே கொடூரம் - பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை



  • பைக் திருடர்கள் 2 பேர் கைது



  • கல்லூரி மாணவி கொலை - அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் 2 பேர் கைது ; காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்



  • திருக்கழுக்குன்றம் தாலுகா மருத்துவமனைக்குள் புகுந்து நர்சுகள் சுடிதாரில் படுத்து உருண்டு முத்தமழை பொழிந்த முகமூடி வாலிபர் ; நோயாளிகள் பீதி



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]