அரசு கொடுத்த நிலம் அபகரிப்பு - பொன்னேரி ஆர்டிஓ அலுவலகத்தில் கரிமணல் கிராம மக்கள் போராட்டம்
9/21/2016 3:14:48 PM
பொன்னேரி, -ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கரிமணல் பகுதியில் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் வீடுகள் கட்டியதுபோக சுமார் ஒரு ஏக்கர் நிலம் காலியாக இருந்தது. இந்த இடத்தில் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் குடிசை அமைத்தனர். இதை அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசாருடன் விரைந்தனர். காலி இடத்தில் கட்டப்பட்ட குடிசைகளை பிடுங்கி எறிந்ததால் பிரச்னை பெரிதானது. இதையடுத்து, கரிமணல் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கு மேற்பட்டவர்கள் கடந்த 4 நாட்ளாக உண்ணாவிரதம் இருந்தனர். 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு உருவானது.
இந்த நிலையில், பொன்னேரி டிஎஸ்பி கண்ணன் தலைமையில் போலீசார் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்களை பொன்னேரியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர். இவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஊருக்கு செல்ல மாட்டோம் என கூறி திருமண மண்டபத்திலேயே தங்கி இருந்தனர். அதிகாரிகளின் உத்தரவின்படி, மண்டப உரிமையாளர் மின்சாரம், குடிநீரை தடை செய்தனர். தண்ணீர் கிடைக்காததால் கடைகளில் வாட்டர் பாக்கெட் வாங்கி குடித்தனர்.
இந்த நிலையில், இன்று காலை கரிமணல் பகுதி மக்கள் பொன்னேரி சப்கலெக்டரை சந்திக்க மண்டபத்தில் இருந்து வெளியேறி பொன்னேரி ஆர்டிஓ அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அவர்களை வழிமடக்கிய பொன்னேரி போலீசார், “சப்கலெக்டர் பணி காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு செல்கிறார். அவரை சந்திக்க முடியாது” என கூறி ஆர்டிஓ அலுவலகத்தின் கேட்டை பூட்டினர். இதனால் ஆத்தி–்ரமடைந்த கிராம மக்கள் ஆர்டிஓ அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பொன்னேரி டிஎஸ்பி கண்ணன் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மக்கள், ‘’கடந்த 4 நாளாக உண்ணாவிரதம் இருந்தோம். கலெக்டர் வந்து பார்க்கவில்லை’ என்று கூறினர்.