இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கன்னியாகுமரி அருகே பரபரப்பு - கடலில் மிதந்து வந்த மர்ம படகு

9/21/2016 3:12:51 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

கன்னியாகுமரி, - கன்னியாகுமரி அருகே மீன் வலையுடன் கடலில் மிதந்த மர்ம படகால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் ஜேசு அந்தோணி. இவருக்கு சொந்தமான படகில் கன்னியாகுமரியை சேர்ந்த ராஜன், அரசாங்கம், செல்வம் ஆகியோர் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 4 கடல் மைல் தூரத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் படகு ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அதில், மீன் வலைகளும் காணப்பட்டன. ஆனால், மீனவர்கள் யாரும் இல்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் தொழிலுக்கு செல்லாமல் அந்த மர்ம படகை கயிற்றால் கட்டி, கரைக்கு இழுத்து வந்தனர். மேலும், கன்னியாகுமரி பங்குத்தந்தை நசரேனிடம் சம்பவம் குறித்து தெரிவித்தனர். அவர் உடனடியாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ், ஏட்டு நீலமணி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து படகை மீட்டனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த படகு கடியபட்டணத்தை சேர்ந்த பங்குதாஸ்(58) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் கடியப்பட்டணம் கடற்கரையில் படகை கட்டி வைத்திருந்தபோது காற்றில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து படகு பங்குதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் சில
  • செலவு செய்ய கட்சியினர் தயாராக இல்லை - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக தயக்கம்



  • பெரியபாளையம் கோயில் 10வது வாரம் நிறைவு அம்மனுக்கு அபிஷேகம்



  • ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி நல்லக்கண்ணு தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்



  • அபராதம், நடவடிக்கை எதிரொலி - ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டம்



  • மு.க.ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு



  • உள்ளாட்சி தேர்தலையொட்டி டுவிட்டர் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையம் உத்தரவு



  • ரூ15 கோடிக்கு அமெரிக்காவில் விற்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் அரியலூர் வந்தது



  • தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை மாயம் - அதிகாரி பகீர்



  • காவிரி விவகாரத்தில் வன்முறை டேங்கர் லாரிகள் முடங்கியதால் கேஸ் தட்டுப்பாடு அபாயம்



  • தேயிலை தோட்டத்தில் தூங்கிய யானைகள் - வால்பாறையில் பரபரப்பு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]