இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சித்தோடு அருகே கர்நாடக சரக்கு லாரிக்கு தீவைத்த 4 பேர் கைது

9/21/2016 3:03:04 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

பவானி, -சித்தோடு அருகே கர்நாடக மாநிலப் பதிவெண் கொண்ட லாரிக்கு தீ வைத்த கும்பலைச் சேர்ந்த நால்வரைப் போலீசார் நேற்று கைது செய்தனர்.சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் சேகர். இவருக்குச் சொந்தமான லாரியில் மும்பையிலிருந்து ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ் (37) ஓட்டிச் சென்றார். கடந்த 15-ம் தேதி இரவு சித்தோடு அருகே சென்றபோது காரில் வந்த மர்ம கும்பல், லாரிக்குத் தீ வைத்துவிட்டுத் தப்பியோடியது. இதில், ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள், மற்றும் லாரி எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். காவிரி பிரச்னையில் தமிழர்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டதால் கோபத்தில் தீ வைத்திருக்கலாம் எனக் கருதி விசாரணை நடத்தினர்.சந்தேகத்தின்பேரில் சித்தோடு ராவுத்தகவுண்டர் மகன் கணபதி (33) என்பவரிடம் விசாரிக்கையில், நண்பர்களுடன் சேர்ந்து அவர் லாரிக்கு தீ வைத்தது தெரிந்தது. இதையடுத்து, கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பிரதீப்குமார் (34), கவுந்தப்பாடி பச்சாக்கவுண்டனூரைச் சேர்ந்த செல்வராஜ் (32), சித்தோடு கரும்புக்காட்டைச் சேர்ந்த சதீஷ்குமார் (37) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் சில
  • ஓட்டேரியில் வடமாநில வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து - மர்ம ஆசாமிக்கு தர்ம அடி



  • ₹4 கோடி ஹவாலா பணம் கொள்ளை - கோவை இன்ஸ்பெக்டர் விரைவில் கைது?



  • ஆலந்தூரில் வழிப்பறி செய்த 3 பேர் கைது - ஜாமீனில் வந்தவர்கள்



  • இலவச ஆட்டை விற்க மறுப்பு தலை துண்டித்து தாய் கொலை



  • 15 வயது மாணவி பலாத்காரம் காதலனுக்கு போலீஸ் வலை



  • புகைப்படத்தை மார்பிங் செய்து பெண்ணை மிரட்டியவர் கைது



  • ராசிபுரம் அருகே கொடூரம் - பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை



  • பைக் திருடர்கள் 2 பேர் கைது



  • கல்லூரி மாணவி கொலை - அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் 2 பேர் கைது ; காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்



  • திருக்கழுக்குன்றம் தாலுகா மருத்துவமனைக்குள் புகுந்து நர்சுகள் சுடிதாரில் படுத்து உருண்டு முத்தமழை பொழிந்த முகமூடி வாலிபர் ; நோயாளிகள் பீதி



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]