ரபேல் நடால், மோ பாராவின் மருத்துவ ஆவணங்கள் ‘லீக்’ - ரஷ்ய ஹேக்கர்கள் வெளியிட்டனர்
9/20/2016 3:13:37 PM
லண்டன்: உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்தின் (வாடா) இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊடுருவிய ரஷ்ய ஹேக்கர்கள், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோனா பைல்ஸ் ஆகியோர் பற்றிய ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது, பிரிட்டன் தடகள வீரர் மோ பாரா, கோல்ப் வீரர் ஜஸ்டின் ரோஸ், ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் உள்ளிட்டோரின் மருத்துவ ஆவணங்களையும், ரஷ்ய ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் வாடாவிடம் ரகசியமாக இருந்த ஆவணங்கள் வெளியே தெரிந்துள்ளது. கடந்த மாதம் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில், 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டங்களில் மோ பாரா தங்கம் வென்றார். இந்த போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்ட 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 112 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கோல்ப்பில், ஐஸ்டின் பிரவுன் தங்கம் வென்றார். 14 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரபேல் நடால், ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், மார்க் லோபசுடன் இணைந்து தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.