பூவை.மூர்த்தி நினைவு நாள் -ஆவடியில் 200 பேருக்கு மரக்கன்றுகள்
9/3/2025 1:04:49 PM
ஆவடி, -ஆவடி நகர புரட்சி பாரதம் கட்சி சார்பில் அக்கட்சி நிறுவனர் பூவை.மூர்த்தியாரின் நினைவு நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஆவடி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நடைபெற்றது.
இதற்கு நகர செயலாளர் பிரிஸ் பன்னீர் தலைமை தாங்கினார். நகர தலைவர் எம்.ஜி.செல்வம் வரவேற்றார். பூவை.மூர்த்தியாரின் உருவப்படத்துக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில துணைப் பொது செயலாளர்கள் முல்லை பலராமன், ப.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, 200 பேருக்கு மரக்கன்றுகள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதில் நிர்வாகிகள் வெங்கல் கோவிந்த், சேக்காடு நந்தகுமார், வேதகிரி, மாரி, பாண்டியன், பென்ஜி, முல்லை ராஜசேகரன், சாம், மூர்த்தி நகர் மணிமாறன், ரஜினி, திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.