இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தெரசாவுக்கு புனிதர் பட்டம்: வாடிகனில் நாளை விழா

9/3/2025 1:02:55 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது

வாடிகன், - ஏழை மக்கள் மற்றும் நோயாளிகளுக்கு சேவை ஆற்றுவதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து கொண்டவர் அன்ைன தெரசா. உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் மரணமடைந்து 19 ஆண்டுகளுக்கு பின், இப்போது அவருக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கப்படுகிறது. அவரது அர்ப்பணிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக இப்பட்டம் வழங்கப்படுகிறது. தெரசா துவங்கிய அமைப்புகளின் செயல்பாடு மற்றும் அவரது கருத்துகளில் உடன்பாடு இல்லாத சில கத்தோலிக்க அமைப்புகள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இத்தாலியில் ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர்  சதுக்கத்தில் நாளை நடைபெறும் விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், அன்னை தெரசாவை  புனிதர் பட்டம் பெற்றவராக அறிவிக்கிறார். அப்போது 2 மணி நேர பிரார்த்தனை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்கள், பேராயர்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா  சுவராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு கலந்து கொள்கிறது. இந்த  குழுவினர் நேற்று டெல்லியில் இருந்து ரோமுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோரும் விழாவில்  கலந்து கொள்கிறார்கள்.
 கடந்த 1910ம் ஆண்டு அல்பேனிய பெற்றோருக்கு பிறந்த அன்னை தெரசா, 1929ம் ஆண்டு இந்தியாவின்  டார்ஜிலிங் நகருக்கு ஆசிரியையாக பணிபுரிய வந்தார். பல ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 1950ல் ‘‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’’ என்னும் சேவை  அமைப்பை கொல்கத்தாவில் தொடங்கினார். இந்த அமைப்புக்கு இன்று 133 நாடுகளில்  கிளைகள் உள்ளன. 5 ஆயிரம் பேர் இதில் பணிபுரிகின்றனர். 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியன்று இறுதி மூச்சு நிற்கும் வரை அன்னை  தெரசா, தன்னை சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய நினைவு  தினத்தையொட்டி அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கும் விழா வாடிகன்  நகரில் நடக்கிறது.
  விழாவில் பங்கேற்க சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் 5ம் தேதி வரை வாடிகன் நகரில் தங்கியிருப்பார். பின்னர், அங்கிருந்து ஜெர்மனி சென்று தொழிலதிபர்களை சந்தித்து மேற்கு வங்கத்திற்கு முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறார். வரும் 10ம் தேதி அவர் கொல்கத்தா திரும்புகிறார்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் பேருந்து நிலையம் - திட்டத்தை கைவிட அதிகாரிகள் முடிவு? ; எச்சரிக்கை பலகையால் பரபரப்பு



  • வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் ஜெயலலிதா மரியாதை



  • திருவொற்றியூர் அருகே குடிநீர் லாரி வராததால் மக்கள் மறியல்



  • கீழ்ப்பாக்கத்தில் வைர நகைகளுடன் பெண் மாயம்



  • அதிவேக ரயில்களின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் -  மத்திய அரசுக்கு ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • காவிரி வறண்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்து விநாயகர் சிலைகள் கரைப்பு



  • சூணாம்பேடு அருகே லாரி மோதி 2 பேர் பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்



  • கும்மிடிப்பூண்டியில் மெஷினில் சிக்கி தொழிலாளி பலி - தொடரும் விபத்தால் பீதி



  • ‘மரியே வாழ்க.. மாதாவே வாழ்க’ கோஷம் விண்ணதிர வேளாங்கண்ணி தேர் பவனி கோலாகலம் - திருவிழா இன்று நிறைவு



  • விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் - இதயம் சென்னை பறந்தது



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]