மணல் கடத்தலை தடுத்ததால் லாரி ஏற்றி இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி: ஒருவர் கைது, டிரைவர் ஓட்டம்
9/3/2025 12:42:06 PM
திருவள்ளூர், -திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டர், போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் லாரி மற்றும் கனரக வாகனம் மூலம் மணல் கடத்தப்படுவதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, லாரியில் மணல் கடத்திவந்த ஒருவரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
இதனால் அந்த லாரியை வேகமாக ஓட்டி இன்ஸ்பெக்டர், போலீசார் மீது மோத வந்தனர். சுதாரித்து ெகாண்ட அவர்கள் தப்பினர். இதையடுத்து லாரி அங்கிருந்து வேகமாக தப்பி சென்றது.இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மணல் கடத்த பயன்படுத்திய லாரியின் உரிமையாளர் லட்சுமணன் (37) கைது செய்தனர். இன்ஸ்பெக்டர், போலீசார் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் முனுசாமியை (32) போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.