இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மலேசியாவில் பயங்கரம் - தஞ்சை வாலிபர் உயிரோடு எரிப்பு?

9/3/2025 12:39:32 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்


திருச்சி, -தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுப்ரமணியர் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(32). இவரது மனைவி பெரியாச்சி(30), மகன் முனீஸ்வரன்(6), மகள் முனீஸ்வரி(5). அதிராம்பட்டினத்தில் வருமானம் இல்லாததால் தொழில் தேடி கடந்த 2014ல் மலேசியா சென்றார். அங்கு கேஸ் சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த ஜூலை 19ம் தேதி கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு வேலை முடிந்து சென்றுள்ளார். அப்போது ஏஜென்சி உரிமையாளருக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் கண்ணன் தனது உடலில் தீப்பற்றி எரிந்தவாறு கூச்சலிட்டவாறு ஓடியுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் கோணியை கொண்டு தீயை அணைத்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், கண்ணனை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருடன் இருந்த நண்பர்கள் மூலம் தகவலறிந்த கண்ணனின் மனைவி மற்றும் பெற்றோர் கடந்த ஜூலை 27ம் தேதி தஞ்சாவூர் கலெக்டர் மற்றும் தன்னார்வ அமைப்பிடம் தீக்காயத்துடன் உயிருக்கு பேராடும் கணவனை மீட்டு தருமாறு மனு கொடுத்தனர்.
மனுவின் பேரில் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று காலை மலேசியாவில் இருந்து மலிண்டோ விமானம் மூலம் கண்ணன் தீக்காயத்துடன் திருச்சி விமானநிலையம் அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு உடல் பயணம் செய்ய ஏதுவாக உள்ளதா என பரிசோதித்தபின் ஆம்புலன்ஸ் மூலம் மனைவி பெரியாச்சி சொந்த ஊரான தூத்துக்குடி லெவஞ்சிபுரத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரது உறவினர்கள், மலேசியாவில் ஏற்பட்ட தகராறில் முதலாளியே பெட்ரோல் ஊற்றி எரித்ததாக குற்றம்சாட்டினர்.
கண்ணன் கூறுகையில், கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்த போது எனக்கும், முதலாளிக்கும் தகராறு ஏற்பட்டு என்னை கொடுமைப்படுத்தினர். திடீரென சில நிமிடத்தில் என் மீது தீப்பற்றி எரிந்து உயிருக்கு போராடினேன் என்றார்.

மேலும் சில
  • சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் திடீர் தர்ணா



  • பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு - பைக் கொள்ளையர்களுக்கு வலை



  • கோயில் திருவிழாவில் போலீசுக்கு சரமாரி அடி - 2 பேர் கைது



  • பெண்கள் கூந்தல் அறுப்பு சைக்கோ வாலிபர் கைது



  • வெளிநாட்டு வேலை ஆசை காட்டி பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய சென்னை பெண் கைது



  • ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தாலிசெயின் பறிப்பு



  • சிறுத்தையை கொன்றவர் கைது



  • வீட்டில் மது அருந்தியபோது தகராறு - தந்தை சரமாரி வெட்டிக்கொலை ; மகன்கள் ஓட்டம்; காஞ்சி. அருகே பயங்கரம்



  • மாணவியை தூக்கிச் சென்று கட்டிப்போட்டு பலாத்காரம் - கல்லூரி மாணவர் வெறிச்செயல்



  • அயனாவரம் ஜூவல்லரியில் 9 கிலோ தங்கம் கொள்ைள - புதுச்சேரி விடுதியில் மானேஜர் சுற்றிவளைப்பு ; சென்னை கொண்டுவரப்படுகிறார்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]