இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் செப்டம்பர் 3வது வாரம் மேட்டூர் அணை திறப்பு?

9/3/2025 12:37:28 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்


திருச்சி, - தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் மேட்டூர் அணை செப்டம்பர் 3வது வாரம் திறக்கப்படலாம்.காவிரியில் கர்நாடக அரசு தர வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விடும்படி கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்களும் வாதிட்டனர்.இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், வாழு வாழவிடு என நடந்து கொள்ளும்படியும், மனிதாபிமானத்தோடு தண்ணீர் விடும்படியும் கூறி வழக்கை வரும்5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். எனவே வரும் 5ம் தேதி விசாரணை மீண்டும் தொடங்குகிறது. இந்த விசாரணையின் முடிவில் தமிழகத்திற்கு ஓரளவு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம் என தஞ்சை விவசாயிகள் கருதுகிறார்கள்.

50 டிஎம்சி தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளிலும், கபினியிலும் சேர்த்து 100 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் உள்ளது. எனவே குறைந்தபட்சம் 25 டிஎம்சி தண்ணீர் கொடுக்கும்படி உத்தரவிட்டாலும் மேட்டூர் அணை திறப்பதற்கு போதுமான தண்ணீர் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமானால் குறைந்த படசம் 90 அடி தண்ணீர் தேவை. தற்போது 37 டிஎம்சி உள்ள நிலையில் இன்னும் 15 டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலே நீர்மட்டம் 90 அடியை எட்டிவிடும். 90 அடி தண்ணீர் மூலம் சம்பா சாகுபடிக்கு 30 நாட்களுக்கு திறக்கலாம். அதற்குள் வடகிழக்கு பருவமழை வந்து விடும்.

எனவே மேட்டூர் அணை செப்டம்பர் 3வது வாரத்தில் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,033 கனஅடி தண்ணீர் வந்தது.நேற்று காலை வினாடிக்கு 10,694 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலையை விட இன்று வினாடிக்கு 2,661 கனஅடி தண்ணீர் வரத்து குறைந்து விட்டது.அணையின் நீர்மட்டம் இன்று காலை 74.870 அடி. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,250 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 37.034 டிஎம்சி.

மேலும் சில
  • விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜி-தமிழ் பில்டர்ஸ் சார்பில் அன்னதானம்



  • ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்



  • நெல் அறுவடை செய்ய முடியவில்லை - வங்கிக்கடனும் கிடைக்கவில்லை விஷம் குடித்து விவசாயி தற்கொலை



  • புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார்



  • ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்து - ரயில் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாப சாவு ; காப்பாற்ற முயன்ற தாயின் கால் நசுங்கியது



  • அதிமுகவில் நிர்வாகிகள் களையெடுப்பு தொடர்கிறது - விருகம்பாக்கம் ஜெ. பேரவை தலைவர் திடீர் நீக்கம்



  • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - நக்மா பரபரப்பு பேட்டி



  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியாயமாக தேர்தல்: நீதிபதிகள் நம்பிக்கை



  • மேட்டூர் அணையை திறக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்



  • விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது வேன் கவிழ்ந்து 2 பேர் பலி



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]