இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆம்புலன்சில் இருந்து இறக்கி விட்டதால் மகளின் சடலத்தை சுமந்து 6 கிமீ நடந்து சென்ற தந்தை - ஒடிசாவில் பரிதாபம்

9/3/2025 12:24:40 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்


மல்கன்கிரி, -ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கெமுடு. இவரது 7 வயது மகள் பர்ஷாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மிதலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பர்ஷாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக மல்கன்கிரி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.  ஆம்புலன்சில் மகளை அழைத்து கொண்டு கெமுடு, அவரது மனைவி ஆகியோர் சென்றனர். ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென சிறுமி பர்ஷா உயிரிழந்தாள். இதையறிந்த ஆம்புலன்ஸ் டிரைவர், சடலத்தை கீழே இறக்குமாறு கூறியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கெஞ்சி கேட்டுக் கொண்டும் ஆம்புலன்ஸ் டிரைவர் மனமிரங்கவில்லை. இதையடுத்து மகளின் சடலத்துடன் நடுவழியில் கீழே இறங்கினர். தனது சொந்த ஊருக்கு திரும்ப நினைத்த சிறுமியின் தந்தை கெமுடு, மகளின் சடலத்தை தூக்கி கொண்டு நடந்து ெசன்றார். சுமார் 6 கிமீ தூரத்துக்கு சடலத்துடன் அவர் நடந்தார். இதை கண்ட சிலர் கெமுடுவிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார். இதுகுறித்து அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதையடுத்து, வாகனத்துடன் விரைந்து வந்த மருத்துவ குழுவினர், சிறுமியின் சடலத்தை எடுத்து சென்றனர்.  
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்த விசாரணைக்கு மல்கன்கிரி மாவட்ட கலெக்டர் சுதர்சன் சக்கரவர்த்தி உத்தரவிட்டார். மாவட்ட மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் கடந்த மாதம் 24ம் தேதியன்று உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த மனைவியை, கணவர் 10 கிமீ தோளில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சிறுமியின் சடலத்தை அவளது தந்தை தூக்கி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • கெஜ்ரிவாலுக்கு 13ம் தேதி தொண்டையில் ஆபரேஷன் - பெங்களூருவில் மீண்டும் 10 நாள் சிகிச்சை



  • ஒரே தேசம்; ஒரே தேர்தல் மோடி கோரிக்கைக்கு பிரணாப் ஆதரவு



  • பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் - காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச் சூடு



  • பாலியல் வழக்கில் அமைச்சர் கைது - கெஜ்ரிவால் மீது நம்பிக்கை போய் விட்டது : ஹசாரே



  • தலித்கள் மீதான தாக்குதல் ராஜஸ்தானில்தான் அதிகம் - சட்டம்-ஒழுங்கு மோசம் என காங். தாக்கு



  • உ.பி. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற ஏழைகளுக்கு ஸ்மார்ட் போன் அகிலேஷ் புது திட்டம்



  • உ.பி. ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம் 11 வக்கீல்களை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்



  • தியோரியா முதல் டெல்லி வரை - 2500 கி.மீ. கிஷான் யாத்திரை ராகுல்காந்தி தொடங்கினார் ; உ.பி. சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்



  • உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுமா?



  • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் கொண்டாட்டம் துவக்கம்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]