ஆவடி நகராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
9/2/2025 4:57:09 PM
ஆவடி, -ஆவடி நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதற்கு நகராட்சி ஆணையர் மதிவாணன் தலைமை தாங்கினார். 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், கொசுவால் நோய் பரவும் விதம், காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனையை அணுகவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.முகாமில் பூந்தமல்லி சுகாதார துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், நகர் நல அலுவலர் சதீஷ்குமார், ஆவடி நகராட்சி சுகாதார துறை அதிகாரி பழனிச்சாமி, மாவட்ட மலேரியா அலுவலர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.